
நீண்டகாலமாக ஆடுகளை திருடிய கும்பல் மக்களால் நையப்புடைப்பு
யாழ்ப்பாணத்தில் கால்நடை திருட்டில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்த குழுவினர் நேற்று புதன் கிழமை இரவு பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டனர்.
வேலணை 6 ஆம் வட்டாரம் சங்கத்தார்கேணி பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் இவ்வாறு குறித்த குழு மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
வேலணை பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டுத்தனமாக பிடிக்கப்பட்ட ஆடுகள் திருட்டுக் கும்பலின் சந்தேக நபராக கருதப்படும் ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வெளியூரை சேர்ந்த சிலரின் உதவியுடன் குறித்த ஆடுகளை மகேந்திரா வாகனத்தில் ஏற்றிக்கொண்டிருக்கும் போது பிரதேசவாசிகளுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் ஊரிலுள்ள முகியஸ்தர்கள் மற்றும் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததுடன் அந்த திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் 6 ஆடுகள், மகேந்திரா வாகனம், மற்றும் இரண்டு சந்தேக நபர்கள் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் தப்பி ஓடியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்