
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது முறிந்து விழுந்த பாரிய மரம்
ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் நிவ்வெளி தோட்டப் பகுதியில் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழிமை மாலை இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக நேற்று மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை குறித்த வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின்போது பஸ்ஸுக்குள் எவரும் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மரம் முறிந்து விழுந்ததில் பஸ்ஸுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.