நிந்தவூரில் உணவகங்களில் திடீர் சோதனை

 

நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகளிற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் கிழங்குக்கடைகள் (டேஸ்ட்) கடைகளில் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது

இந்நடவடிக்கையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம் றயீஸ் அவர்களின் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.எம்.எம். பைசால் , பொதுச்சுகாதார பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் டெங்கு களத்தடுப்பு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது  மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகள், உணவுகளை கையாளுவதற்கு பொருத்தமற்ற உபகரணங்கள் மற்றும் பழைய எண்ணெய்கள் என்பன கைப்பற்றப்பட்டது.