
நாளை முதல் மழை தீவிரமடையும்!
நாட்டில் நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை மழை தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் – 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.
