
நாளை முதல் பல பகுதிகளில் மழை
நாட்டை அண்மித்த கிழக்கு வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாளை திங்கட்கிழமை முதல் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய சில பகுதிகளில் நாளை திங்கட்கிழமை 2 மணிக்கு பின்னர் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பப்பட்டுள்ளது
அத்துடன், மத்திய மலை நாட்டின் கிழக்கு சரிவு பகுதியிலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகணங்களிலும், கொழும்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
