நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பணிப்புரைக்கு அமைய போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த நடவடிக்கை இன்று தொடக்கம் எதிர்வரும், 7 நாட்களுக்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சுற்றிவளைப்புகளின் மேலதிக கண்காணிப்புகளுக்காக, 9 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.