நவராத்திரி விரதமும் அனுட்டிக்கும் முறையும்

47

நவராத்திரி விரதமும் அனுட்டிக்கும் முறையும்

💥இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 03ம் திகதி தொடக்கம் 11ம் திகதி வரை கொண்டாடப்பட உள்ளது.

💥நவராத்திரி விரதம் என்பது சக்தியை நோக்கி அனுட்டிக்கும் இந்து சமய விரதங்களில் ஒன்று. மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது.

💥நவராத்திரி காலத்தில் முதல் மூன்று நாட்கள், வீரத்தை வேண்டி துர்க்கையை வழிபடுகின்றனர்.அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வேண்டி இலக்குமியை வழிபடுகின்றனர். இறுதி மூன்று நாட்கள் கல்வி, கலைகளை வேண்டி கலைகளை வழிபடுகின்றனர்.

🌺 நவராத்திரி வரலாறு

🌟மகிஷன் என்ற எறுமை ரூபம் கொண்ட அசுரனை வதம் செய்வதற்காக அம்பிகை, ஒன்பது நாட்கள் தவம் இருந்தாள். பல்வேறு சக்தி வாய்ந்த வரங்களை பெற்ற அந்த அசுரனை வதம் செய்வதற்காக அம்பிகைக்கு ஒவ்வொரு தெய்வங்களும் ஒவ்வொரு விதமான ஆயுதங்களை அளிக்கிறார்கள். கடைசியாக அசுரனுடன் அம்பிகையை போரிட்டு, அவனை வதம் செய்கிறாள்.

🌟அவள் வெற்றிக் கொண்ட பத்தாவது நாளையே விஜயதசமியாக கொண்டாடுகிறோம். இதற்கு இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது. அதாவது ராமாயணத்தில் ராமன், ராவணனுடன் ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாவது நாளில் வதம் செய்த நாளை தசரா பண்டிகையாக கொண்டாடுகிறோம். ராவண வதம் முடிந்து, மகாளய அமாவாசைக்கு அடுத்து வரும் அமாவாசையில் ராமன் அயோத்திக்கு திரும்பியதாகவும், அன்று மக்கள் தீபம் ஏற்றி அவரை வரவேற்ற நாளையே நாம் தீபாவளியாக கொண்டாடுவதாக சொலல்ப்படுகிறது.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🌟மகா சங்கார காலத்தின் முடிவில், இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்பிய போது இச்சை என்ற சக்தியும், அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்தபோது ஞானசக்தியும் தோன்றின. பின் கிரியா சக்தியினால் இறைவன் உலகைப் படைத்தான் என்ற கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது.

🌟நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.

🌟நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனுஇ கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்மேற்கோள் தேவை.

🌟இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.

விரதகாலம்

🌞நவராத்திரி நோன்பு புரட்டாதி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை குறித்து நோற்கப்படும் நோன்பாகும்.

🌞இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும்.

🌞இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே நவராத்திரி விரதமாக அனுசரிக்கப்படுகிறது. நவராத்திரி பூசை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்யப்பட வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றதுஜமேற்கோள் தேவை. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுட்டிக்கப்படும் நோன்பு சாரதா நவராத்திரி நோன்பாகும்.

நவராத்திரி கொலு வைக்க காரணம்

🌜முன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்துள்ளான். அவன் காளி தேவியின் தீவிர பக்தன். ஒரு சமயம் அந்த மன்னன் நாடு, ராஜ்யம் என அனைத்தையும் இழந்து துன்பப்பட்டான். அப்போது மகாகாளியை வழிபட்டான். அப்போது மன்னன் முன் தோன்றிய காளி, இந்த நதிக்கரையில் இங்குள்ள மண் மற்றும் நீரை பயன்படுத்தி என்னை சிலையாக வடித்து ஒன்பது நாட்கள் வழிபடு என்றாள். அதன் படி மன்னனும் வழிபட்டான்.

🌜பத்தாவது நாளில் காளி, நவ கன்னியர்களையும் அழைத்துக் கொண்டு மன்னனுக்கு துணையாக, எதிரிகளுடன் போர் செய்தாள். அந்த போரில் வெற்றி பெற்ற மன்னனுக்கு இழந்த அனைத்தும் மீண்டும் கிடைத்தது. இதனால் மனம் மகிழ்ந்து மன்னன், தன்னை போலவே மண்ணால் அம்பிகையை சிலை செய்து வைத்து வழிபடும் மக்கள் அனைவருக்கும் அவர்கள் வேண்டிய வரங்கள் அனைத்தையும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டான். அப்படியே ஆகட்டும் என அம்பிகையும் வரமளித்தாள். இதன் அடையாளமாக தான் மண்ணால் செய்யப்பட்ட பொம்பைகளை கொலுவாக அடுக்கி வைத்து, வழிபடும் முறை ஏற்பட்டது.

🌼🌻பூசை முறை🌻🌼

ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள் நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத்தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூசை தொடங்கவேண்டும்.

🔅கும்பம் வைத்தல்

நறுமணமுள்ள சந்தனம், பூ (மலர்), இவைகளுடன் மாதுளை, வாழை, பலா, மா முதலியவற்றின் கனிகளை மிகுதியாக வைத்து நெய் சேர்த்த அன்னம், வடை, பாயாசம் முதலியவைகளை நிவேதித்தல் வேண்டும். புனுகு, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம், அகிற்பட்டை பன்னீர் இவைகளுடன் கூடிய அஷ்ட கந்தகம் சாத்தித் துதித்துப் பலவித ஆடல் பாடல்களால் தேவியை மகிழச் செய்யவேண்டும்.

🔅குமாரி பூசை

குமாரி பூசை நவராத்திரி காலத்தில் இன்றியமையாததாகும். இரண்டு வயதிற்கு மேல் பத்து வயதிற்கு உட்பட்ட குமாரிகளே பூசைக்கு உரியவர்கள் முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு குமாரியாக முறையே குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் பூசிக்கப்படவேண்டும்.

பூசிக்கப்படும் குமாரிகள் நோயற்றவர்களாகவும் அழகுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். குமாரிகளுக்கு ஆடை, அணி, பழம், தாம்பூலம், மலர், சீப்பு, கண்ணாடி முதலிய மங்களப் பொருட்கள் மஞசள் குங்குk;, தட்சணை கொடுத்து உபசரித்து அறுவகை சுவைகளுடன் அமுது செய்வித்தல் வேண்டும்.

🔅விஜய தசமி

நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு. இவ்விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.

🔅கன்னி வாழை வெட்டல்

ஆலயங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழமை. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச் சங்காரம் செய்தாள் என்பர். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனைச் சங்கரித்த நேரம் மாலை வேளை, செங்கட் பொழுதில் இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கம்.

🔆நவராத்திரி விரத நியதிகள்

புரட்டாதி மாத வளர்பிறை பிரதமைத் திதியில் கும்பம் வைத்து நவமி வரை பூசை செய்தல் வேண்டும்.
வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும்.

விரதம் கைக்கொள்ளுவோர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்களும் பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.

ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் (உபவாசம்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்குமுன் பாறணை செய்தல் வேண்டும். இயலாதவர்கள் முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.

விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப்பதார்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பாராயணம் செய்து குடும்ப அங்கத்தவர்களுடன் பாறணையைப் பூர்த்தி செய்யலாம்.

தசமி திதியில் பாறணை செய்தல் வேண்டும்.

இவ் விரதத்தை ஒன்பது வருடங்கள் தொடர்ந்து அனுட்டித்தல் வேண்டும்.

நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது.

விரதகாலங்களில் ஓதத்தக்க தோத்திரப்பாடல்கள்

1.தேவி மகாத்மியம்

2.அபிராமி அந்தாதி

3.துர்க்கா அஷ்டகம்

4.இலட்சுமி தோத்திரம் (கனகதாரா தோத்திரம்)

5.சகலகலாவல்லி மாலை

6.சரஸ்வதி அந்தாதி

7.மஹிஷாசுரமர்த்தினி தோத்திரம்

8.ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்

நவராத்திரியின் பயன்கள்

நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார் என்பது ஐதீகம். நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும். கொலு வைத்திருப்பவர்கள் அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

நவராத்திரி 2024: துர்கா பூஜை 9 நாட்கள் தேதிகள் மற்றும் வண்ணம் கொண்ட நாட்காட்டி

1ஆவது நாள் – மஞ்சள்

2ஆவது நாள் – பச்சை

3ஆவது நாள் – சாம்பல் நிறம்

4ஆவது நாள் – செம்மஞ்சள்

5ஆவது நாள் – வெள்ளை

6ஆவது நாள் – சிவப்பு

7ஆவது நாள் – கரு நீலம்

8ஆவது நாள் – இளஞ்சிவப்பு

9ஆவத நாள் – நாவல் நிறம்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Sureshkumar
Srinath