நவகமுவவில் தேரர் படுக்கையில் தீக்குளித்து உயிரிழப்பு

நவகமுவ, பட்டினியவத்த பிரதேசத்தில் உள்ள ஆசிரமமொன்றில் வசித்து வந்த பிக்கு ஒருவர், படுக்கையில் கிடந்தவாறு தீக்குளித்து உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பட்டினியவத்த பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவிலான ஆசிரமத்தில் வசித்து வந்த 81 வயதுடைய பௌத்த துறவி இவ்வாறு தீக்குளித்து உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு பௌத்த துறவியானார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்