
நல்லூரானின் சூர்யோற்சவம் : ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் எழுந்தருளினார் சூரியபகவான்
-யாழ் நிருபர்-
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 19ஆவது நாள் திருவிழாவான சூர்யோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதி வெளி வீதியுலாவும் வந்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

