
நற்பிட்டிமுனையில் வீதியை கடக்க முயன்ற பெண் மீது மோதிய வேன்
அம்பாறை – நற்பிட்டிமுனை பகுதியில் நேற்று புதன் கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி குடும்ப பெண் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் நற்பிட்டிமுனை பகுதியில் உள்ள உறவினரின் மரண வீட்டிற்கு தனது குடும்பத்தாருடன் சென்றிருந்த வேளையில் வீதியை கடக்க முற்பட்ட போது நற்பட்டிமுனை பகுதியில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த வேன் மோதியதில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.
மேலும் அதி வேகத்துடன் பயணித்த வேனில் அகப்பட்ட இவர் மோதுண்ட இடத்தில் இருந்து 72 மீற்றருக்கு அதிக தூரம் வரை வண்டியின் சில்லில் அகப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கல்முனை தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்