நடு கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு

ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 49 பேர் லிபியாவில் இருந்து படகில் மத்திய தரைக்கடல் வழியாக கடந்த கடந்த திங்கட்கிழமை ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோத அகதிகளாக நுழையும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

அகதிகள் பயணித்த படகு லிபியாவின் சொவரா அருகே சென்றபோது திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணித்த அனைவரும் கடலில் மூழ்கினர்.

இந்த விபத்து தொடர்பாக கடந்த சனிக்கிழமை லிபியா கடற்படைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மீட்புப்பணியில் ஈடுபட்ட வீரர்கள் அகதிகள் 7 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், இந்த சம்பவத்தில் 42 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.