நடிகர் அஜித்குமாருக்கு டெல்லியில் இன்று பத்மபூஷண் விருது

டெல்லியில் நடிகர் அஜித்குமாருக்கு இன்று திங்கட்கிழமை மாலை பத்மபூஷண் விருது வழங்கப்படவுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்வின்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி, 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பை மத்திய அரசு கடந்த ஜனவரி 25ஆம் திகதி வெளியிட்டது.

நிகழாண்டில் 7 போ் பத்ம விபூஷண் விருதுக்கும், 19 போ் பத்ம பூஷண் விருதுக்கும், 113 போ் பத்மஸ்ரீ விருதுக்கும் தோ்வாகியுள்ளனா்.

தமிழகத்தில் நடிகா் அஜித் குமாா், நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி செட்டி ஆகிய மூவருக்கு பத்ம பூஷண் விருதும், பாரதி ஆய்வாளா் சீனி விஸ்வநாதன் உள்பட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் என மொத்தம் 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் டெல்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று மாலை நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அஜித்குமாருக்கு விருது வழங்க உள்ளார்.

இதற்காக நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்தினருடன் டெல்லி சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமூகப் பணி, பொது விவகாரம், அறிவியல் மற்றும் பொறியியல் துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க