தோழிகளின் தண்ணீர் போத்தல்களில் விஷத்தை கலந்த 10 ஆம் தர மாணவி

குருநாகல் நாரம்மல பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில்  இன்றைய தினம் செவ்வாய் கிழமை விசக்கலவையுடனான நீரை பருகிய மாணவர்கள் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாராம்மல பகுதியிலுள்ள பாடசாலையில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே விசக்கலவையுடனான நீரை பருகியுள்ளனர்.

10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் அதே தரத்தில் கல்வி கற்கும் சக மாணவிகளுடன் குரோதமடைந்தமையினால் மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விஷத்தை கலந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாராம்மல பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்