தோப்பூர் -பாலத்தோப்பூர் மையவாடி வீதி காப்பட் வீதியாக புனரமைப்பு
-மூதூர் நிருபர்-
கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திருகோணமலை, தோப்பூர் -பாலத்தோப்பூர் மையவாடி வீதியை காபட் வீதியாக புனரமைப்பதற்கான வேலைகள் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ன சேகர ,பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு இவ்வீதிக்கான வேலைகளை ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
750 மீற்றர் நீளமுள்ள இவ் வீதியானது 2 கோடியே 17 இலட்சம் ரூபாய் செலவில் காபட் வீதியாக புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.
கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இன்றைய தினம் திருகோண மாவட்டத்தில் ஆறு வீதிகளுக்கும் நாடளாவிய ரீதியில் 100 வீதிகளுக்குமான வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




