
தொழில் முனைவோர் சங்கத்திற்கு நிதி உதவி
-கிண்ணியா நிருபர்-
தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் இயங்கி வரும் தொழில்முனைவோர் சங்கத்திற்கு ஆறு இலட்சம் ரூபா நிதி கையளிக்கப்பட்டது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதியின் வழிகாட்டுதளுக்கிணங்க பாலம்போட்டாறு பெண்கள் தொழில் முனைவோர் சங்கத்திற்கு திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால்(வன்னிகோப் அவுஸ்ரேலியா, காந்தி சேவை மன்றம் நியூசிலாந்து ஆகியோரின் நிதிப் பங்களிப்பில்) ரூபாய் 600000 நன்கொடையாக கடந்த வெள்ளிக்கிழமை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இதன் மூலமாக தங்களது தொழிலை விருத்தி செய்ய சங்க உறுப்பினர்களுக்கு வட்டியற்ற கடன் மூலமாக இதன் மூலம் வழங்கி வைக்கப்படவுள்ளது.
இதில் கணக்காளர் செல்வதாஸ்இநிருவாக உத்தியோகத்தர் உடகெதர மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பங்குபற்றுதலுடன் காசோலை மக்கள் சேவை மன்ற உத்தியோகத்தர் .பிரகலாதனால் சங்கத்தினருக்கு வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்