-மஸ்கெலியா நிருபர்-
கொட்டகலை பகுதியில் உள்ள ஆகீல் தோட்டத்தில் வீடொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள கொட்டகலை ஆகீல் தனியார் தோட்டத்தில் இன்று காலை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக ஒரு குடியிருப்பு முற்றிலும் எரிந்து சாம்பல் ஆகியுள்ளது.
இதன்போது அருகில் இருந்த மேலும் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்முள்ளது.
திம்புள்ளபத்தனை பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்த போதிலும் ஒரு வீடு முழுமையாக எரிந்துள்ளது.
சம்பவம் குறித்து திம்புள்ளபத்தனை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இத் தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வீட்டை இழந்து நிர்கதியாகியுள்ளனர்.





