தையல் பயிற்சி நிலையத்திற்கு தையல் மெசின்கள் அன்பளிப்பு

-மூதூர் நிருபர்-

திருகோணமலை – புல்மோட்டை பாரியா பள்ளி நிருவாகத்தால் நடாத்தப்படும் தையல் பயிற்சி நிலையத்திற்கு லைலா உம்மா பவுண்டேசன் தலைவர் கலாநிதி ஹரீஸ்டீன் அவர்களால் மூன்று தையல் மெசின்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை கல்வியை நிறைவு செய்த சுமார் 80 யுவதிகள் இங்கு இலவசமாக பயிற்சி பெற்றுவருவதோடு அவர்களின் தொழில் முயற்சிக்காக இவ்வுதவிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்