அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில், மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட, களுதாவளை மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையைச் சேர்ந்த, குகன் பகிர்ஜன் என்ற மாணவன், 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உயரம்பாய்தல் போட்டியில் கலந்து கொண்டு, சாதனை படைத்து முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இவருடன் போட்டியிட்ட ஏனைய மாணவர்களை வீழ்த்தி, 1.98 மீற்றர் உயரம் பாய்ந்து இலங்கையில் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் புதிய சானையைப் படைத்துள்ளார்.
இப்போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தியகம மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றிருந்து.
சாதனை படைத்த பகிர்ஜன், நேற்று திங்கட்கிழமை காலை தனது பாடசாலைக்குத் திரும்பி வரும் வழியில், அயல் பாடசாலைகளால் வீதியில் நின்று வரவேற்கப்பட்டதோடு, பட்டிருப்பு வலயக் கல்வி கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரனாலும் வரவேற்கப்பட்டு பாராட்டப்பட்டார்.
நேற்று திங்கட்கிழமை மலர் மாலை அணிவிக்கப்பட்டு, வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட்டு, பின்னர் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் வைத்து பாராட்டு விழாவும் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் க.சத்தியமோகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பட்டிருப்பு வலயக் கல்வி அதிகாரிகள், முன்னாள் அதிபர்கள், பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழையமாணவர்கள், கிராமமட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கையில் பாசாலைகளுக்கிடையிலான 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் 1.98 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப்பதக்கம் பெற்ற பகிர்ஜனை, பாடாசாலைக் சமூகம் மற்றும் பொது அமைப்புக்கள் என பலரும் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, பணப் பரிசும் வழங்கி கௌரவித்தனர்.