 
												தெற்காசியாவின் அதிக செலவுமிக்க நாடாக இலங்கை தேர்வு
தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பின் இரண்டாவது மிக செலவுமிக்க நாடாக இலங்கை வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, தனி ஒரு நபரின் வாழ்க்கைச் செலவு வாடகையைத் தவிர்த்து 506 டொலர் அல்லது 153,899 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இது பயனர் உருவாக்கிய வாழ்க்கைச் செலவு புள்ளி விபர வலைத்தளமான Numbeo இன் தரவுகளை மையப்படுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்க் நாடுகளில், மாலைதீவு ஒரு நபருக்கு மாதம் 840.4 அமெரிக்க டொலர் செலவுடன் மிகவும் விலையுயர்ந்த நாடாகக் கருதப்படுகிறது.
Numbeo இணையதளத்தின்படி, கொழும்பு நகரில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு, வாடகை நீங்கலாக, சௌகரியமாக வாழ மாதாந்தம் ரூபா 570,997 செலவாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தச் செலவில் குழந்தைப் பராமரிப்பு, மளிகைப் பொருட்கள், பொழுதுபோக்கு, உணவகச் செலவுகள், பாடசாலைக் கட்டணம், வீட்டுச் செலவுகள் மற்றும் வாகனச் செலவுகள் போன்றவை அடங்கும்.
அதிக வரிகள் மற்றும் விலையேற்றம் காரணமாக மக்கள் சுமையுடன் உள்ள நிலையில், மத்திய வங்கியின் ‘வருடாந்த பொருளாதார ஆய்வு 2024’ சில முக்கிய விடயங்களைக் குறிப்பிடுகிறது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டியின் அடிப்படையில், சராசரி மாதாந்த குடும்ப நுகர்வுச் செலவு 2023 இல் ரூபா 103,383 ஆக இருந்தது, 2024 இல் 1.6 வீதமாக அதிகரித்து ரூபா 105,063 ஆக உயர்ந்துள்ளது.
இருப்பினும், 2022 இல் (2021 உடன் ஒப்பிடுகையில்) பதிவான 74.9 வீத அதிகரிப்பு மற்றும் 2023 இல் (2022 உடன் ஒப்பிடுகையில்) பதிவான 16.5 வீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதைக் காட்டுகிறது.
இத்தகைய சூழ்நிலைகளில், குடும்பங்கள் தங்கள் செலவுகளைச் சமாளிப்பதற்கு எதிர்மறையான சமாளிப்பு வழிகளை நாட வேண்டியுள்ளது.
மத்திய வங்கியின் 2024 செப்டம்பர் 18 முதல் 2025 செப்டம்பர் 18 வரையிலான தரவுகளின்படி, பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒன்பது மரக்கறிகளின் ஒரு கிலோகிராம் சராசரி விலை ரூபா 225 இலிருந்து ரூபா 321.10 ஆக அதிகரித்துள்ளது, இது ஒட்டுமொத்தமாக 42.7 வீத உயர்வாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கோழிகளை விவித்ததால் இளம் பெண் ஒருவர் சிறை செல்லும் நிலைக்கு தள்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோ ரோசன்பெர்க் (23 வயது). இவரது தந்தை கால்நடை வைத்தியர் என்பதால் சுமார் 40 ஏக்கரில் பூனை, நாய் என வளர்ப்பு விலங்குகளுக்கு மத்தியில் வளர்ந்தார்.
ஐந்து வருடங்களுக்கு மேல் சிறைத் தண்டனை
கல்லூரியில் பயின்று வரும் ரோசன்பெர்க் Direct Action Everywhere என்ற விலகுங்கள் நல குழுவில் செயல்பட்டு வருகிறார்.
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நள்ளிரவில், ரோசன்பெர்க் மற்றும் அவரது குழுவினர், வட கலிபோர்னியாவில் உள்ள இறைச்சி ஆலைக்குள் தொழிலாளர்கள் போல் வேடமிட்டு நுழைந்தனர்.
அங்கிருந்த ஒரு லொறியில் அடைக்கப்பட்டிருந்த கோழிகளில் இருந்து நான்கு கோழிகளை எடுத்துச் சென்றனர். குழுவினர் இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். இதன் பின் அவர் மீதும் அவரது குழுவினர் மீதும் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில், தான் விலங்குகளைத் திருடவில்லை என்றும், அவற்றை கொடுமையான சூழ்நிலையிலிருந்து மீட்டதாகவும் ரோசன்பெர்க் வாதிட்டார்.
இந்நிலையில் அத்துமீறி நுழைதல், வாகனத்தை சேதப்படுத்த முயற்சி செய்தல், மற்றும் சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை உறுதி செய்து அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விவரங்கள் வரும் டிசம்பர் 3 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த குற்றங்களுக்காக ரோசன்பெர்க்குக்கு ஐந்து வருடங்களுக்கு மேல் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
ரோசன்பெர்க்கின் சட்டத்தரணிகள், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
 
			
