துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பொலிஸ் கான்ஸ்டபிள் காயம்

-பதுளை நிருபர்-

பதுளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தகெடிய பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

கந்தகெட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கலா உல்பத சந்துன் வகாவ பகுதிக்கு சோதனை நடவடிக்கைகளுக்காக பொலிஸ் குழுவினர் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த காட்டுப் பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்த நிலையில் மீகாகியூல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை அக்கலா உல்பத சந்துன் வகாவ பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்