துப்பாக்கி சூடு: 12 வயது சிறுமி பாதிப்பு
மாளிகாகந்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சிறுமியும் தந்தையும் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளனர். இதன் போது முச்சக்கர வண்டியில் பயணித்த 12 வயது சிறுமியும் அவரது தந்தையும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்