
துப்பாக்கிச் சுடு: 6 பேர் பலி
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3 பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மொரேனா மாவட்டத்தின் லேபா கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை காணித் தகராறு காரணமாக நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு குழுக்களுக்கு இடையிலான காணித் தகராறு, காரணமாக துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்படடுள்ளதுடன் இதன் போது 3 பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டதுடன், 4 பெண்கள் உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்