தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஷேட போக்குவரத்துச் சேவைகள்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லும் வசதிக்காக விசேட போக்குவரத்துச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி, இன்று சனிக்கிழமை, கொழும்பின் புறக்கோட்டையிலிருந்து (Pettah) ஹட்டன், பதுளை, நுவரெலியா, மஸ்கெலியா, நானுஓயா, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு மேலதிகமாக 75 பேருந்துகள் சேவையில் உள்ளன.
நாளை ஞாயிற்றுக்கிழமை இவற்றுக்கு மேலதிகமாக 73 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.