தி/மூ/ செல்வநகர் அந்நூர் வித்தியாலத்தை தரமுயர்த்தும் நிகழ்வு

 

-மூதூர் நிருபர்-

தி/மூ/ செல்வநகர் அந்நூர் வித்தியாலத்தை தரமுயர்த்தி 10 ஆம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் வரலாற்று நிகழ்வு இன்று திங்கட்கிழமை பாடசாலை அதிபர் கே.எம்.றிஸ்மி தலைமையில் இடம்பெற்றது.

53 வருட வரலாற்றைக் கொண்ட இப் பாடசாலை 9 ஆம் தரம் வரையான மாணவர்களையே இதுவரை காலம் கொண்டிருந்ததோடு இம்முறையே 10 ஆம் தரத்திற்கு தரமுயர்த்தப்பட்ட வரலாற்று நிகழ்வாக இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது முதலில் அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.இதன் பின்னர் புதிய வகுப்பு திறந்து வைக்கப்பட்டு மாணவர்களுக்கு 10 ஆம் தர புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டன.இதில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வில் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் முனவ்வறா நளீம் முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்தோடு மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் எம்.சியாத் (டி.டி (DD) ,தோப்பூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.பீ.ஏ.ஜப்பார், சமூக சேவையாளர்களான எம்.டீ.தாயிஸ், ஏ.எஸ்.றிபாஸ்,றமலி பயாஸ் , பெற்றார் சங்கத்தினர்,பழைய மாணவர் சங்கத்தினர்,பெற்றோர்கள் என பலரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தனர்.