திருமணம் செய்வதாகக்கூறி நடிகையிடம் பண மோசடி: சந்தேகநபர் கைது

பேஸ்புக் ஊடாக சிங்கள நடிகையொருவருடன் நட்பை ஏற்படுத்தி திருமணம் செய்வதாக உறுதியளித்து பணம் மோசடி செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரத்தினபுரி கஹவத்தையைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர் கொழும்பு நீதிமன்றில் கடமையாற்றும் சட்டத்தரணி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து 55 இலட்சம் ரூபாவும், கம்பஹா நீதிமன்றின் சட்டத்தரணி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 49 இலட்சம் ரூபாவும் மோசடி செய்த குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை பட்டதுவன பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய நடிகையொருவரிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறி 65 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ள குற்றச்சாட்டில் மஹர சிறைச்சாலை அதிகாரிகளால் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சந்தேக நபர் தன்னை சமூக நல ஆர்வலர் எனக் கூறி இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்