
திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது
ஆபரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டுவந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவின் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று திங்கட்கிழமை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எம்பிலிபிட்டிய, கல்வங்குவ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
எம்பிலிபிட்டிய, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் கலவானை பொலிஸ் பிரிவுகளில் தங்க ஆபரணங்களையும் திருட்டுகளையும், நவகமுவ மற்றும் தனமல்வில பொலிஸ் பிரிவுகளில் 02 மோட்டார் சைக்கிள்களைத் திருடியுள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.