திருகோணமலை மாவட்ட இளைஞர்களுக்கு சிறப்பு கௌரவம்

-கிண்ணியா நிருபர்-

“ஜனநாயக ஆட்சி பரப்பில் மக்கள் செயற்படும் இயலுமையை உருவாக்கல்” எனும் நோக்கில் இலங்கை முழுவதும் இருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் , சிங்கள இளைஞர் யுவதிகளுக்கான இளைஞர் மேம்பாட்டு நிகழ்ச்சி திட்டமானது PAFFREL நிறுவனத்தால் நடத்தப்பட்டது.

இதில் திருகோணமலை மாவட்ட இளைஞர்களுக்கு விசேட விருது வழங்கி சான்றிதழ் வழங்கப்பட்டது.