திருகோணமலை ஊடகவியலாளர்களை சந்தித்த ஜனாதிபதி
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
ஊடகவியவாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக அப்துல்சலாம் யாசீம் ஜனாதிபதிக்கு தெரிவிக்கையில், ஊடகவியலாளர்கள் காணி மற்றும் வீட்டு வசதிகள் அற்று வாழ்வதாக எடுத்துக்கூறினார்.
அத்துடன் ஊடகவியலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சகல விடயங்களையும் கேட்டறிந்த ஜனாதிபதி, இவ்விடயம் தொடர்பாக குழுவொன்றை நியமித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பைத் தொடர்ந்து திருகோணமலை கடற்கரையையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.