திருகோணமலையில் பாரிய விபத்து: 2 பேர் படுகாயம்

திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் கடல்முக சந்திக்கு அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை தலைமையக பொலிஸ் எல்லைக்குட்பட்ட திருஞானசம்பந்தர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது குறித்த வீதியினை கடக்க முற்பட்ட மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதுடன் எதிர் திசையில் பயணித்த சிறிய ரக வேனில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வேனுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் இருவரும் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.