திருகோணமலையில் பலத்த பாதுகாப்பு
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை-நகரை அண்மித்த பகுதியில் முப்படையினர் பாதுகாப்பு கடமையில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் அபயபுர சந்தி, மூன்றாம் கட்டை, தபால் கந்தோர் சந்தி மற்றும் அதிகளவில் மக்கள் நடமாடும் இடங்களில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
கொழும்பில் நாளை சனிக்கிழமை நடைபெற இருக்கின்ற எதிர்ப்பு பேரணியை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை முற்றுகையிட கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், அவசரமாக பாதுகாப்பு திருகோணமலையில் பலப்படுத்துவதன் நோக்கம் கடந்த எதிர்ப்பின் போது மஹிந்த ராஜபக்ச திருகோணமலைக்கு பாதுகாப்பு கருதி வருகை தந்திருந்தார்.
இதேபோன்று நாளை நடைபெற உள்ள எதிர்ப்பின் போது ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்கும் நோக்கில் திருகோணமலைக்கு அழைத்து வரலாம்.
இதனாலையே இவ்வாறான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றது எனவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இருந்த போதிலும் திருகோணமலை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் நாளைய தினம் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.