திருகோணமலையில் நெற்றியில் காயத்தோடு சடலம் மீட்பு!

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி பாலத்துக்கு அருகிலுள்ள ஆற்றில் ஆணொருவரின் சடலமொன்று இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஐந்து பிள்ளைகளின் தந்தையான கிண்ணியா மஹ்ரூப் நகர் பகுதியைச் சேர்ந்த முகமட் லெப்பை முபாரக் (வயது 62) என பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலங்கேணி பாலத்துக்கு அருகில் ஆற்றில் மிதந்து கிடந்த சடலத்தை கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி மௌலவி எம். எஸ்.ஷாபி நேரில் சென்று பார்வையிட்டதுடன், நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளதால் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

குறித்த மரணம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்