
திருகோணமலையில் நூல் வெளியீட்டு விழா
-கிண்ணியா நிருபர்-
வைத்தியர் அருமைநாதன் ஸதீஸ்குமார் எமுதிய முத்தமிழறிஞர் புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி அவர்களின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.25 க்கு திருகோணமலை மாநகர சபை பொது நூலக மண்டபத்தில் சம்பூர் தமிழ்க்கலாமன்ற உறுப்பினர் கவிஞர். ம. சச்சிதானந்தம் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வின் முதன்மை அழைப்பாளராக முன்னாள் அதிபர் கலாபூஷணம் க. ஜெயநாதன் அவர்களும், கெளரவ அழைப்பாளராக வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் கவிஞர். அ . அச்சுதன் மற்றும் எண்ணம்போல் வாழ்க்கை கலை மன்றத்தின் தலைவர் கனக. தீபகாந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நூல் ஆய்வினை கவிஞர் தில்லைநாதன் பவித்ரன் வழங்கினார்.
விழாவில் நூலின் முதல் பிரதியை
முதன்மை அழைப்பாளர் கலாபூஷணம் க. ஜெயநாதனுக்கும் சிறப்பு பிரதிகளை கெளரவ அழைப்பாளராக கலந்து சிறப்பித்த வாசல் வாசகர் வட்டத்தின் தலைவர் கவிஞர். அ . அச்சுதன் மற்றும் எண்ணம்போல் வாழ்க்கை கலை மன்றத்தின் தலைவர் கனக. தீபகாந்தன் ஆகியோருக்கு நூல் ஆசிரியர் வழங்கி வெளியீட்டு வைப்பதையும்.
செல்லக்குட்டியின் மகள் இளங்கலைஞர் சுஜந்தினி யுவராஜாவுக்கு நூல் ஆசிரியர் நூலின் பிரதியை வழங்குவதையும் நிகழ்வில் கலந்து சிறப்பித்த ஒரு பகுதியினரையும் காணலாம்.
