திருகோணமலையில் கிரிக்கட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கான கிரிக்கட் உபகரணங்கள் இலங்கை கிரிக்கட் சபையின் ஏற்பாட்டில் திருகோணமலைகுளக்கோட்டன் மண்டபத்தில் வைத்து இன்று வழங்கி வைக்கப்பட்டன.
“இலங்கை கிரிக்கட்டின் தேசிய பாதை திட்டத்தின் “கீழ் குறித்த கிரிக்கட் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வை திருகோணமலை மாவட்ட கிரிக்கட் சங்கம் ஒழுங்கு செய்திருந்தன. இதில் குறித்த அமைப்பின் தலைவர் உறுப்பினர்கள் துறை சார் அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்..