திருகோணமலையில் கடலுக்குள் உள்வாக்கப்பட்டு வரும் கிராமம்: மக்கள் கவலை

திருகோணமலை – வீரநகர் கரையோரப் பகுதியில் உள்ள மக்களுடைய குடியிருப்பு பகுதி திடீரென கடலுக்குள் உள்வாங்கப்பட்டு வருவதால்  அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக கடலரிப்பின் காரணமாக குறித்த பகுதி கடலுக்குள் உள்வாங்கப்பட்டு வருவதாகவும் இவ்வாறான சம்பவம் தம் வாழ்வில் முதல் முறையாக, இடம்பெறுவதாகவும் அப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கடலரிப்பினால் கடற்கரையை அண்டியிருந்த சில வீடுகளின் மதில்கள், கட்டடங்கள், தென்னைமரங்கள் என்பன சேதமடைந்துள்ளதுடன் இந் நிலைமை நீடிக்கும் என்றால் குறித்த கிராமம் முழுமையாக கடலில் முழ்கி விடும் என குறித்த பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை கடலரிப்பில் இருந்து தம்மை பாதுகாக்கும் முகமாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்