திசைகாட்டிக்கு ஆதரவளித்த ஐ.ம.சக்தியின் ஆறு பேர் இடைநிறுத்தம்
பேருவளை நகர சபையின் மேயர் மற்றும் உப மேயர் தெரிவின் போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வௌியாகியுள்ள கடிதத்தில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.