தாய்வானில் ஃபங்-வோங் சூறாவளி தாக்கம்
தாய்வானில் ஏற்பட்ட ஃபங்-வோங் (Fung-Wong) சூறாவளிக்குப் பின்னர் 8,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 51 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள அலுவலகங்கள், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
