தானியங்கள் உட்பட பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம்

நாட்டில் தானியங்கள் உட்பட பல்வேறு வகையான பயிர்களின் வருடாந்தத் தேவையை பூர்த்தி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பெரும்போகத்திலிருந்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

சோளம், உளுந்து, பயறு, நிலக்கடலை உள்ளிட்ட பல வகையான தானியங்களின் வருடாந்த அறுவடை நாட்டின் நுகர்வுக்கு போதுமானதாக இல்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட தானியங்களை இறக்குமதி செய்வதற்கு வருடாந்தம் பெருமளவு பணத்தை செலவிட வேண்டியுள்ளதாக செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் சோளத்தின் வருடாந்தத் தேவை 06 மெட்ரிக் தொன்களாக இருப்பதுடன் நாட்டில் 03 மெட்ரிக் தொன்களே உற்பத்தி செய்யப்படுவதாகவும் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விரிவான திட்டத்தின் கீழ் இப்பயிர்கள் பயிரிடப்படும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்