
தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட 14 வயது மாணவன்!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – வடமராட்சியில் மாணவன் ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார் .
கரவெட்டி யா/இருதயக்கல்லூரி பாடசாலையில் தரம் 9 இல் கல்வி கற்று வரும் குறித்த மாணவன், வீட்டில் நேற்றைய தினம் இரவு தூக்கிட்டு உயிரிழந்தள்ளதாக கூறப்படுகின்றது .
சம்பவத்தில், கரவெட்டி மத்தணி பகுதியைச் சேர்ந்த நகுலேஸ்வரன் யக்சன் (வயது 14) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர், இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
