தற்போதைய எரிபொருள் நெருக்கடி இன்னும் ஒரு வருடத்திற்கு தொடரும்

26

தற்போதைய எரிபொருள் நெருக்கடி இன்னும் ஒரு வருடத்திற்கு தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஒரு நேரத்தில், எரிபொருள் வரிசை எப்போதாவது இழக்கப்படும், ஆனால் மீண்டும் வரிசை நிகழும்.

இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் கடன் கடிதம் வழங்கப்பட்டது, ஆனால் ரஷ்ய கப்பல் காரணமாக அது நிராகரிக்கப்பட்டுள்ளது. 

தற்போது இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும், ஆனால் இது 300 மில்லியனாக பாதியாகக் குறைக்கப்பட வேண்டும்.

இந்நிலையில் எரிபொருள் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் நடத்துவதற்காக அமைச்சர்கள் இருவர் ரஷ்யாவிற்கு நாளை பயணமாகவுள்ளனர், என அவர் மேலும் தெரிவித்தார்.

 

Sureshkumar
Srinath