தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை : 3 கேள்விகளுக்கும் இலவச புள்ளி இறுதி தீர்மானம்
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சர்ச்சைக்குரிய 3 கேள்விகளுக்கும் இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.