தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: மக்களே உங்களிடம் ஆதாரம் இருக்கின்றதா?

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் கசிந்துள்ளதாக கூறப்படுவதற்கு மேலதிகமாக ஏதேனும் வினாக்கள் கசிந்துள்ளமைக்கான ஆதாரம் இருந்தால் அது தொடர்பான தகவல்களை விரைவில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான தகவல்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறப்பட்டுள்ளது.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாக்கள் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ள நிலையை கருத்தில் கொண்டு, விடைத்தாள் திருத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்