தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

 

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயம் ஏற்பாடு செய்திருந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கழமை செட்டிபாளையம் மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில், பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன்,

தற்போது நாங்கள் ஆரம்ப கல்வியிலேயே சாதனை படைத்த மாணவர்களைத்தான் கௌரவித்திருக்கின்றோம்.

ஆனாலும் எமது கல்வி வலயத்தில் ஆரம்பக் கல்வி கற்பிப்பதற்காக வேண்டி மாத்திரம் 212 ஆசிரியர்களின் தேவை எமது வயலயத்தில் இருக்கின்றது.

அவ்வாறு ஆரம்ப பிரிவு ஆசிரியர்களின் பற்றாக்குறை இருந்தும் எமது கல்வி வலையம் ஆரம்பக் கல்வி பிரிவிலே பல சாதனைகளை புரிந்துள்ளது. என அவர் இதன்போது தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.ஜஸ்ரீனா முரளிதரன் இதற்போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களைக் கௌரவித்தார்.

இதன்போது கல்வில் செயற்பாடுகளுக்கு பெரிதும் உதவிவரும் அரசாங் அதிபரை வலயக் கல்விப் பணிப்பாளர், அதிபர்கள், ஆசிரியர்கள், உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்திருந்தனர்.