தம்பலகாமம் பகுதியில் விபத்து – ஒருவர் பலி
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 98ம் கட்டை சந்தியில் மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து இன்று புதன்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.
இவ் விபத்தில் மூதூர் தோப்பூரை சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து பேருந்தில் இருந்து இறங்கி பாதசாரிகள் கடவையை கடக்கும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் காயங்களுக்குள்ளாகி மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.