தமிழர்களோடு சிங்கள விவசாயிகளும் பூசை வழிபாட்டில்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை பன்குளம் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பன்குளம் பிள்ளையார் ஆலயத்தில் இம்முறை சிறுபோக விவசாய நடவடிக்கைகள் சிறப்பாக முடிவுற்றமைக்கு நன்றி தெரிவித்து பூசைவழிபாடுகளையும், பொங்கல் நிகழ்வுகளையும் நேற்று புதன் கிழமை சிறப்பாக நடத்தினார்கள்.

இந்தநிகழ்வில் தமிழர்களோடு சிங்கள விவசாயிகளும் பெருமளவில் ஒற்றுமையாக கலந்துகொண்டமை ஒரு சிறப்பம்சம் ஆகும்.

தமிழர்களோடு சிங்கள விவசாயிகளும் பூசை வழிபாட்டில்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்