
தபால் மூல வாக்களிப்புக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் 867 விண்ணப்பங்கள் நிராகரிப்பு
2024 ஜனாதிபதித் தேர்தலில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரி மாவட்டச் செயலாளர் சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தபால் மூல வாக்களிப்புக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 27645 ஆகவும் இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 26778 எனவும் 867 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரி மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
42 மையங்களில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என்றும், ஹார்டி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் வாக்கு எண்ணும் பணி நடைபெறும் என்றும் அவர் மேலும் கூறினார்.
தற்போது, சிரேஷ்ட வாக்களிப்பு நிலைய கட்டளைத் தளபதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு தபால் மூல வாக்குகளை வழங்குவதற்கான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் எதிர்காலத்தில் சபை செயலாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்க எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
