தபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு
தபால் ஊழியர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தபால் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
தபால் ஊழியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 4 மணி முதல் நாளை திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி வரை இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.