தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது

தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடரும் என தபால் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

19 கோரிக்கைகளை முன்வைத்து, தபால் தொழிற்சங்கங்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேநேரம் உடனடியாக அமைச்சருடன் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் இ.ஜி.சி.நிரோஷன் தெரிவித்துள்ளார் .

கலந்துரையாடலுக்குப் பின்னர், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவர தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.