
தன்னை நிர்வாணமாக காண்பித்து ஆபாச குறுந்தகவல் அனுப்பிய இளைஞன்
கம்பஹா பகுதியில் யுவதியிடம் தன்னை நிர்வாணமாக காண்பித்து கையடக்கத் தொலைபேசி மூலம் ஆபாச குறுந்தகவல் அனுப்பிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெயங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் யுவதி ஒருவருக்கு தன்னை நிர்வாணமாக காண்பித்து யுவதியின் கையடக்கத் தொலைபேசிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.இது தொடர்பில் பொலிஸாரிடம் குறித்த யுவதி வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
