தனியார் காணிகளை கபளீகரம் செய்ய முயற்சி: செந்தில்தொண்டமானின் தலையீடு?

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை நிலாவளி வீதியில் ஆறாம் கட்ட பிரதேசத்தில் லட்சுமி நாராயணன் கோவிலுக்கு அருகில் உள்ள காணிகளின் பாதைகள் தனி நபர் ஒருவரால் தடைப்படுத்தப்பட்டு அது தொடர்பில் முப்பது குடும்பங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டு உள்ளதாக அப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினர்.

குறித்த நடவடிக்கைகள் முன்னால் கிழக்கு ஆளுனரின் தலையீட்டில் ஏற்படுத்தப்பட்டதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 40 வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் அவர்கள் குறித்த உறுதி காணிகளில் வசித்து வந்த நிலையில் பிரான்சிலிருந்து வருகை தந்த ஒரு நபர் தன்னுடைய காணி என்று கூறி இவ்வாறான செயற்பாடு ஒன்று இடம்பெற்று தற்போது வழக்கு நடந்து கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக கிறிஸ்தவ மதஸ்தலம் ஒன்று பாதை மூடப்பட்டு முடக்கப்பட்டுள்ளது அதற்கு வழிபட வரும் மக்கள் அநேகர் பிரச்சினையை எதிர்கொள்வதாக குறித்த கிறிஸ்தவ மத பாதிரியார் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்