தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பொலிஸ் பாதுகாப்பை கோரியுள்ளனர்
இலங்கை பெற்றோலிய தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில குழுக்கள் செய்த பல்வேறு இடையூறுகளை மேற்கோள் காட்டி, எரிபொருள் போக்குவரத்தின் போது பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கடமைக்கு சமூகமளிக்க முடியாது என சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்துள்ளார்.